India Languages, asked by StarTbia, 1 year ago

2. பாரதிதாசனார் __________ என அழைக்கப்படுகிறார்.
1. புரட்சிக்கவிஞர் 2. தேசியக்கவிஞர் 3. உவமைக்கவிஞர்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter7 தமிழ் வளர்ச்சி-
Page Number 40 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


2. பாரதிதாசனார் புரட்சிக்கவிஞர் என அழைக்கப்படுகிறார்.


விளக்கம்:


“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவை சொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.


தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது.


இந்திய அரசு இவர் தன் படைப்புகளுக்காக "சாகித்ய அகாடமி" விருது வழங்கி கௌரவித்துள்ளது.
Similar questions