India Languages, asked by sumerchahal3793, 1 year ago

பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.

Answers

Answered by anjalin
15

இறந்தோரைப் புதைக்கும் வழக்கம்

  • ஈமப்பொருட்கள் என்பவை இறந்தவரின்  எலும்புகளோடு ஈமச்சின்னத்தில் புதைக்கப்படும் பொருட்கள், மரணத்திற்குப் பிறகான இறந்தவரின் வாழ்விற்கு அவை உதவக்கூடும் என்று மக்கள் நம்பியிருக்கலாம்.
  • எகிப்து பிரமிடுகளிலும் இதுபோன்ற செய்பொருட்கள் உண்டு.
  • கல்லால் உருவாக்கப்பட்ட டோல்மென்கள் ஈமச்சடங்கின் நினைவுச் சின்னமாக நிறுவப்பட்டன.
  • சிஸ்ட் என்பது மண்ணில் புதைக்கப்படும் கல்லறை போன்றது.
  • இவை நான்கு புறமும் நான்கு கற்பாளங்களை நிறுத்தி, மேலே ஒரு கற்பாளத்தை வைத்து மூடி உருவாக்கப்படும்.
  • அர்ன் என்பவை மட்பாண்ட சாடிகள்.
  • இவை இறந்தவர்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்டவை. மக்கள் இறந்தவர்களைப் புதைப்பதற்கு பெரிய கற்களைப் பயன்படுத்தியதால்,இரும்புக் காலம், பெருங்கற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
Similar questions