i) செல்ட் எனப்பட்ட தீட்டப்பட்ட
கற்கோடரிகளைப் புதிய கற்கால
மக்கள் பயன்படுத்தினார்கள்.
ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த
சான்று சென்னை மாவட்ட த்தில் உள்ள
பையம்பள்ளியில் காணப்படுகிறது.
iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த
பண்பாட்டுக்காலம் வெண்கலக் காலம்
எனப்படுகிறது.
iv) விலங்குகளை வளர்த்தல், பயிர்
செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம்
இடைக்கற்காலம் எனப்படுகிறது.
அ) (i) சரி ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும் (iii) சரி ஈ) (iv) சரி
Answers
Answered by
0
(i) சரி
செல்ட் எனப்பட்ட தீட்டப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்.
- புதிய கற்கால மக்கள் தமிழ்நாட்டு பகுதிகளில் வாழ்ந்தனர்.
- இந்த மக்களின் தொழில் வேளாண்மை ஆகும் மேலும் இவர்கள் விலங்குகளை பயன்படுத்தியே இந்த வேளாண்மை தொழிலை செய்தனர் செல்ட் என்னும் கூர்மையான கற்கோடாரிகளை புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினர்.
- கால்நடைகளை வளர்த்தல் அல்லது மேய்த்தல் போன்றவை அவர்களது தொழில்களில் முக்கியமான ஒன்றாகும்.
- புதிய கற்கால மக்கள் மெருகேற்றப்பட்ட கூர்மையான கருவியான கற்கோடாரிகளை பயன்படுத்தினர் இதன் கை பிடி மரத்தால் செய்யப்பட்டுள்ளது.
- இன்றும் சில கிராம கோவில்களில் இத்தகைய மெருகேற்றப்பட்ட கூர்மையான கற்கருவிகளை வழிபடுகின்றனர்.
- பெரும்பாலும் இந்த கோவில்கள் தமிழ்நாட்டு பகுதிகளில் காணப்படுகிறது.
Similar questions
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Chemistry,
1 year ago
Math,
1 year ago