India Languages, asked by ShruthiS5868, 8 months ago

இயங்கு - செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.

Answers

Answered by steffiaspinno
5

இயங்கு - செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக:

கதிர் இயந்திரத்தை இயக்கினான் - செய்வினைத்தொடர்

கதிரால் இயந்திரம் இயக்கப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்

  • ஒரு தொடரில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில்  வரும்.
  • இந்த வாக்கியத்தில் செய்யப்படுபொருளோடு "ஐ " எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும்.
  • இதில் பொதுவாக செயப்பாட்டு வினையில் எழுவாயுடன் ஆல், ஆன் இவற்றில் ஓன்று நேராகவோ, மறைவாகவோ வரலாம்.
  • "இயங்கு " -  "கதிர் இயந்திரத்தை இயக்கினான்" .
  • இது செய்வினைத்தொடர் எனப்படும்.
  • செயப்பாட்டுவினை என்பது துணைவினைகளைக்  கொண்டு செயல்படுகின்றது.
  • படு, உண், பெறு போன்ற துனைவினைகள் ஒரு செய்யப்பாட்டுத் தொடரை முழுமையடையச் செய்கின்றது.
  • ஒரு வாக்கியம் செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வாக்கியத்தில் அமையும்.
  • இதில் எழுவாயோடு "ஆல்" என்ற மூன்றாம்  வேற்றுமை உருபும் , பயனிலையோடு "பட்டது, பெற்றது" சேர்ந்து வரும்.
  • "இயங்கு" -  "கதிரால் இயந்திரம் இயக்கப்பட்டது".
  • இது செயப்பாட்டுவினைத்தொடர் எனப்படும்.
Similar questions