India Languages, asked by viveksain7231, 8 months ago

கூற்று : சிறுநீரகங்களின் வழியே யூரியாவெளியேற்றப்படுகிறது.காரணம் : யூரியா ஒரு நச்சுத்தன்மையுடையபொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாகயூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.

Answers

Answered by steffiaspinno
0

கூற்று காரணம் இரண்டும் சரி.

  • வளர்ச்சிதை மாற்ற நிகழ்வானது  சில நைட்ரஜன்  நச்சுத்தன்மையுடைய பொருட்களை  தயாரிக்கின்றன.
  • தோலினால் வெளியேற்றப்படும் கழிவுகள்: சிறிதளவு நீர், யூரியா மற்றும் வியர்வை வடிவில் உப்புக்களை நீக்கல்.

சிறுநீரகங்கள்:            

  • இது அடர் சிவப்பு நிறங்கொண்டது. இதன் வடிவம் அவரை வடிவமாகும்.
  • ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ நீளமும் 5 செ.மீ அகலமும் மற்றும் 3 செ.மீ பருமனும் கொண்டதாயிருக்கிறது.  
  • சிறுநீரகத்தின் வெளிப்பகுதி கார்டெக்ஸ் மற்றும் உட்பகுதி மெடுல்லா ஆகும்.
  • சிறுநீரகத்தில் காணப்படக்கூடிய இந்த இரு பகுதிகளும் நெஃப்ரான்களைக் கொண்டுள்ளது.
  • இதிலுள்ள மெடுல்லா சிறுநீரக பிரமிடு என அழைக்கப்படுகிறது.
  • எனவே சிறுநீரகங்களின் வழியே யூரியா  வெளியேற்றப்படுகிறது.
  • மேலும் யூரியா ஒரு நச்சுத்தன்மை கொண்ட பொருளாகும். இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமானால்  இறப்பு ஏற்படும்.
Similar questions