India Languages, asked by Bharatkaushik4843, 7 months ago

பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்குக.

Answers

Answered by steffiaspinno
12

மெய்க்கீர்த்தி பாடலின் நயம்:

  • மெய்க்கீர்த்தி பாடலில் சோழ மன்னனின் சிறப்பையும், சோழ நாட்டின் வளத்தையும் நயமுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழ நாட்டின் வளம்

  • இங்கு வண்டுகள் தேனை உண்டு மயங்குகின்றன.
  • வயலில் நெற்கதிர்கள் போராக இருக்கின்றன.
  • காடுகள் செடி, கொடிகளுடன்  காணப்படுகிறது.
  • சோழ நாட்டில் இருளானது மலைகளை சூழ்ந்து உள்ளது.
  • புலவர் பாட்டில் பொருள் மறைந்து இருக்கும்.  

மக்களின் வளம்

  • மக்கள் யாரும் மயங்குவதில்லை.
  • மக்களிடையே போர் உண்டாவதில்லை.
  • சோழ நாட்டு மக்கள் கொடியவராய் இருப்பதில்லை.
  • மக்களிடையே வறுமை இருள் சூழ்வதில்லை.
  • சோழ நாட்டில் மக்கள் பொருளை மறப்பதில்லை.
  • மன்னனின் பெருமையும், சிறப்பும்  நாட்டு மக்களுக்கு காவல் தெய்வமாய் இருக்கின்றான். மகன் இல்லாதோர்க்கு மகனாய் இருக்கின்றான்.
  • உலக உயிர்களுக்கு உயிராய், மெய்யாய், புகழ் பெற்றவனாய் இருக்கின்றான்.
Similar questions