India Languages, asked by Mathematics6527, 7 months ago

பின்வரும் புலவர்களையும் மன்னர்களையும் சரியான இணையாக பொருத்துக
அ) நக்கீரர் - ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
ஆ)ஔவையார் - பெருஞ்சாத்தன்
இ) கபிலர் - அதியன்
ஈ) நச்செள்ளையார் - திருமுடிக்காரி

Answers

Answered by borsurerajgmailcom
0

Explanation:

put your questions in English language

Answered by steffiaspinno
0

நக்கீரர் - பெருஞ்சாத்தன்  

  • பெருஞ்சாத்தன் என்பவர் வாழ்வதற்கு தம்மிடம் பொருள் உள்ளதா என்று கூட பார்க்காமல் பிறருக்கு தானமாக அளிக்கும் குணம் படைத்தவர்.  இவரது குணத்தை கண்டு நக்கீரர் பாராட்டினார்.
  • பெருஞ்சாத்தன் பிடவூர்கிழார் மகன் ஆவார்.

ஔவையார் – அதியன்

  • இந்த உலகமே வறுமை நிலையில் இருந்தாலும் பிறருக்கு கொடுக்கும் பண்பினை உடையவன் அதியன் என்று ஔவையார் பாராட்டுகிறார்.

கபிலர் – திருமுடிக்காரி

  • தமக்கு தேவையானவற்றை பெரிதாக கருதாமல் தன்னிடம் இருக்கும்  எல்லாவற்றையும் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவன் திருமுடிக்காரி என்கிறார் கபிலர்.

நச்செள்ளையார் - ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்

  • தம்மிடம் பொருள் வாங்குவதற்கு இரவலர்கள் வராமல் போனாலும், அவர்கள் இருக்கும் இடத்தினை அறிந்து அங்கு சென்று கொடுப்பது ஆடு கோட்பாட்டுச் சேரலாதனின் பெருந்தன்மை என்கிறார் நச்செள்ளையார்.
Similar questions