India Languages, asked by mandeep3144, 1 year ago

பொருத்துக
அ) என் அம்மை வந்தாள் - பால் வழுவமைதி
ஆ) கத்தும் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் - கால வழுவமைதி
இ) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - மரபு வழுவமைதி
ஈ) வாடா ராசா மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது - திணை வழுவமைதி

Answers

Answered by kkulothungan3
5

Answer:

என் அம்மை வந்தாள் என்பது திணை வழுவமைதி

கத்தும் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் என்பது மரபு வழுவமைதி

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது காலவழுவமைதி

Answered by steffiaspinno
3

பொருத்துக:

என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது திணை வழுவமைதி .

  • என் அம்மை வந்தாள் என்பதில் அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டதால் இது திணை வழுவமைதி எனப்பட்டது .

கத்தும் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் என்பது மரபு வழுவமைதி.  

  • குயில் கூவும் என்பது தான் மரபு. ஆனால் குயில் கத்தும் என்று கொடுக்கப்பட்டுள்ளதால்  இது  மரபு வழு எனப்பட்டது .

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் கால வழுவமைதி.

  • குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருவார் என்பது தான் சரியான பொருத்தமாகும்.
  • ஆனால் அவர் கண்டிப்பாக வருவார் என்பதை கொண்டு இத்தொடர் அமைக்கப்பட்டுள்ளதால் இது கால வழுவமைதி  எனப்பட்டது.

வாடா ராஜா  என மகளை பார்த்து  தாய் அழைப்பது பால்வழுவமைதி .

  • பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டதால் இது பால்வழுவமைதி எனப்பட்டது.
Similar questions