India Languages, asked by mansimanglani6735, 8 months ago

. வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு
______________ ஆகும்.

Answers

Answered by steffiaspinno
0

குருத்தணுக்கள்

  • ஒவ்வொரு உயிரினமும் செல்களால் ஆனவை.
  • மனித உடலில் காணப்படும் பல்வேறு செல்கள் அவற்றிற்குரிய பணியினை செய்கின்றன.
  • எடுத்து‌க்காட்டாக நரம்பு செல்கள் உணர்வுகளை கடத்தும் பணியினை செய்கின்றன.
  • இது போன்ற செல்கள் மாறுபாடு அடைந்த செல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • மாறுபாடு அடையாத செல்கள் அல்லது வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு குருத்தணுக்கள் ஆகும்.
  • குருத்தணுக்கள் கருநிலை குருத்தணுக்கள் மற்றும் முதிர்நிலை குருத்தணுக்கள் என்று இரண்டு வகைபடுத்தபட்டுள்ளன.

கருநிலை குருத்தணுக்கள்

  • இவை கருகோளத்தின் உட்புறத்தில் காணப்படும் ஆரம்ப  செல்களாகும்.
  • இந்த செல்கள் வேறு எந்த வகையான செல்களாகவும் மாறும் தன்மை கொண்டவை

முதிர்நிலை குருத்தணுக்கள்

  • இந்த வகை செல்கள் ஒரு குறிப்பிட்ட வகையான செல்களை போல் மட்டும் மாறும் திறன் கொண்டவை.
  • இவ்வகை செல்கள்  பச்சிளம் குழந்தைகளிலும், பெரியவர் உடலிலும் காணப்படுகின்றன.
Similar questions