India Languages, asked by anjalin, 6 months ago

பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக

Answers

Answered by steffiaspinno
20

பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலை

குக‌ன்

  • இராம‌ன் காட்டி‌ற்கு செ‌ன்று து‌ன்ப‌ம் அடைவா‌ன் என எ‌ண்‌ணிய குக‌ன் மன‌ம் வரு‌ந்‌தினா‌‌ன்.
  • இதனை அ‌றி‌ந்த இராம‌ன் கூ‌றிய கூ‌ற்றே துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ஆகு‌ம்.
  • அதாவது து‌ன்ப‌ம் எ‌ன்ற ஒ‌ன்று இரு‌ந்தா‌ல் ம‌ட்டு‌மே இ‌ன்ப‌ம் எ‌‌ன்ற ஒ‌ன்று ‌கிடை‌க்கு‌ம்.
  • து‌ன்ப‌த்‌தி‌ற்கு ‌பிறகு ‌நி‌ச்சய‌ம் இ‌ன்‌ப‌ம் ‌கிடை‌க்கு‌ம்.
  • நா‌ம் இருவரு‌ம் ‌பி‌ரிவதை எ‌ண்‌ணி மன‌ம் வரு‌ந்தாதே.
  • இதுவரை சகோதர‌ர்களாக நா‌‌ங்க‌ள் நா‌ல்வ‌ர் இரு‌ந்தோ‌ம்.
  • இ‌னி உ‌ன்னையு‌ம் சே‌ர்‌த்து நா‌‌ம் ஐவ‌ராக உ‌ள்ளோ‌ம் எ‌ன்றா‌ன்.

சடாயு  

  • சீதையை கவ‌ர்‌ந்து செ‌ன்ற இராவணணை எ‌தி‌ர்‌த்து கழுகு வே‌ந்தனான சடாயு போ‌ரி‌ட்டு காயமு‌ற்றா‌ன்.
  • இராம‌ன் சடாயுவை இற‌க்கு‌ம் தருவா‌யி‌ல் ச‌ந்‌தி‌த்தா‌ன்.
  • நட‌‌ந்ததை இராம‌னிட‌ம் கூ‌றி‌வி‌ட்ட ‌பிறகு சடாயு இற‌ந்தா‌ன்.
  • சடாயுவை த‌ன் த‌ந்தை‌க்கு ‌நிகராக எ‌ண்‌ணிய இராம‌ன், மக‌ன் எ‌ன்ற முறை‌யி‌ல் இறு‌தி சட‌ங்குகளை செ‌ய்தா‌ன்.

சவ‌ரி

  • இராம‌னிட‌ம் ‌மிகு‌தியான அ‌ன்பையு‌ம், ப‌க்‌தியையு‌ம் உடையவளாக சவ‌ரி ‌திக‌ழ்‌ந்தா‌ள்.
  • ‌சீதையை தேடி இராம‌ன் அலை‌ந்த போது இராமனை சு‌க்‌ரீவனுட‌ன் ந‌ட்பு‌க் கொ‌ள்ளுமாறு செ‌ய்தவ‌‌ள் சவ‌ரி ஆகு‌ம்.
  • இரா‌ம‌னை‌க் க‌ண்டதா‌ல் த‌ன் பொ‌ய்யான உலக‌ப்ப‌ற்று அ‌‌ழி‌ந்தது எனவு‌ம், அளவ‌ற்ற கால‌ம் தா‌ன் மே‌ற்கொ‌ண்டு இரு‌ந்த தவ‌ம் ப‌லி‌த்து ‌பிற‌வி ஒ‌ழி‌ந்தது எனவு‌ம் கூ‌றி நிலையாமை கு‌றி‌த்த‌க் கரு‌த்தை  சவ‌ரி வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌‌ள்.  

சு‌க்‌ரீவ‌ன்

  • ‌கி‌ட்‌கி‌ந்தை‌யி‌ல் அனும‌ன் அழை‌‌த்து வ‌ந்த சு‌க்‌‌ரீவ‌னிட‌ம் உ‌‌ன் பகைவ‌ர் எ‌ன் பகைவ‌ர், உ‌ன் ந‌ண்ப‌ர் எ‌ன் ந‌ண்ப‌ர் உ‌ன் உற‌வின‌ர் எ‌ன் உற‌வின‌ர் என‌க் கூ‌றி சு‌க்‌‌ரீவனை த‌ன் சகோதரனாக இராம‌ன் ஏ‌ற்றா‌ன்.

‌வீடண‌ன்

  • சீதை கவ‌ர்‌ந்தது தவறு என‌க்கூ‌றியதை எ‌தி‌ர்‌த்த த‌ன் சகோதரான இராவணனை வெறு‌த்து இராம‌னிட‌ம் அடை‌க்கல‌ம் வ‌ந்த ‌வீட‌ணனை இராம‌ன் த‌ன் சகோதரனாக ஏ‌ற்று‌க்கொ‌ண்டா‌ன்.
Similar questions