மினாண்டர் குறித்து நீங்கள் அறிந்தவை யாது?
Answers
Answered by
0
மெனந்தர் I சோட்டர் இந்தோ-கிரேக்க இராச்சியத்தின் இந்தோ-கிரேக்க மன்னர் ஆவார், அவர் இந்திய துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளில் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை தனது தலைநகரான சாகலாவில் இருந்து நிர்வகித்தார். மெனந்தர் ப .த்த மதத்தின் புரவலராக மாறியதற்காக புகழ்பெற்றவர். மெனாண்டர் ஆரம்பத்தில் பாக்ட்ரியாவின் மன்னர்.
Answered by
0
மினாண்டர்
- இந்தோ கிரேக்க அரசர்களில் நன்கு அறியப்பட்ட மினாண்டர் பொ.ஆ.மு. 165/145 முதல் 130 வரை நாட்டின் வட மேற்கில் உள்ள ஒரு பெரிய பகுதியை ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது.
- மினாண்டரின் நாணயங்கள் காபூல், சிந்து நதிகளின் சமவெளிகளில் இருந்து மேற்கு உத்திரப் பிரதேசம் வரையிலான விரிந்த பரந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
- அவரின் நாணயங்களில் மினாண்டர் ஒரு அரசராக, இரட்சகராக, மீட்பராக கூறப்பட்டுள்ளாரே தவிர வெற்றி வீரனாக கூறப்படவில்லை.
- இவர் பாஞ்சாலம் மதுரா அரசர்களுடன் இணைந்து கங்கைப் பகுதிகளை சூறையாடியதாக கருதப்படுகிறது.
- மிலிந்த பின்ஹா என்ற பெளத்தப் பிரதியில்தான் ஒரு பெருமைமிக்க தலைவராக மினாண்டர் அறியப்படுகிறார்.
- மினாண்டர் பெளத்தராகி, பெளத்தத்தினை ஊக்குவித்தாக நம்பப்படுகிறது.
Attachments:
Similar questions