கடல் வாணீகம் குறித்து எழுதுக.
சிறுவினாக்கள்
தொன்மைத் தமிழகம்
Answers
Answered by
3
விடை:
கடல் வாணிகத்தில் தமிழர்கள் சிறந்து இருந்தனர்; பொன்னும் மணியும் முத்தும் துகிலும் கொண்டு, கடல் கடந்து வாணிகம் செய்தனர். பண்டைத் தமிழகத்தில் துறைமுகப்பட்டினங்கள் பல இருந்தன. பூம்புகார் முதலான பெரு நகரங்கள், வணிகர் வாழும் இடங்களாய் இருந்தன. கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும் மயில் தோகையும் சந்தனமும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டன.
கி.மு. பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும் மயில் தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன. தமிழர்களுக்குச் சாவக நாட்டுடனும் கடல் வணிகத் தொடர்பு இருந்தது.
Similar questions
Business Studies,
6 months ago
English,
6 months ago
Hindi,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago