India Languages, asked by StarTbia, 1 year ago

புலியின் தோற்றத்தினைப் பற்றி எழுதுக.
குறுவினாக்கள்
சீறாப்புராணம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:



புலியின் தோற்றம் :



தனது நீண்ட வாலினால் தரையில் அடித்து, உடல் நிமிர்ந்து நான்கு கால்களையும் மடித்துத் தரையின் மேல் படுத்து, இரண்டு கண்களும் நெருப்புப் பொறிகளைக் கக்க, வெண்பற்கள் ஒளிவிட, வாயில் இறைச்சி நாற்றம் வீச, முள் நெருங்கிய காட்டில் சினத்தோடு அப்புலி இருக்கும் என்று பாடல் கூறுகிறது.



விளக்கம்:



அடர்ந்த காட்டில் வாழும் புலியொன்று, அங்கு வாழும் மற்ற விலங்குகளுக்கும் அவ்வழியே வரும் மக்களுக்கும் பெருந்தொல்லை கொடுத்து வந்தது. அப்புலியைக் கண்டு விலங்குகளும், மக்களும் அஞ்சினர். முகம்மது நபியைப் புலி வணங்கி வேண்டியவுடன், புலி வேறு வனத்திற்குச் சென்றுவிட்டது.



புலியின் தோற்றம் குறித்து விவரிக்கும் " நீண்ட வால்நிலம் புடைத்திடக்" என்று தொடங்கும் பாடல் சீறாப்புராணத்தில் விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலத்தில் வருகிறது.


Similar questions