India Languages, asked by StarTbia, 1 year ago

2. ஒழுக்கம் குறித்துப் பெரியார் கூறுவன யாவை?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


ஒழுக்கம் குறித்து பெரியாரின் கருத்து:


ஒழுக்கமும் கற்பும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும் என்றும் கருதினார்.


விளக்கம்:


'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' எனும் வள்ளுவர் வாக்கிற்கேற்ப ஒரு நாடு வளத்துடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருத்தல் அவசியம் என பெரியார் கருதினார். அதனால், ஒழுக்கமும் கற்பும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும் என்று மேடை தோறும் முழங்கினார்.


பெரியார் சமூக முரண்களை எதிர்த்தவர், மூடக்கருத்துக்களை முட்டறுத்தவர். அவரின் வழிகாட்டுதலால், தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.





Similar questions