India Languages, asked by StarTbia, 1 year ago

8. ஞாலம் வெல்லக் கருதுபவர் யாது செய்வார்?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:

உலகம் முழுவதையும் வெல்லக் கருதுபவர், தக்க காலத்தினையும் ஏற்ற இடத்தினையும் அறிந்து செயல்படுவர்.


விளக்கம்:


இந்த கருத்தை கீழ்க்கண்ட குறளில் வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.


ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்

(அதிகாரம்: காலமறிதல் குறள் எண்:484) 


இவ்வுலகையே ஒருவர் முயன்றால்  அல்லது உலகம் போற்றும் சான்றோன் என்னும் உயரிய இலக்குகளை முயன்றால்  அதனை அவனால் அடைய முடியும். அவனுக்கு கிட்டும்.

 

ஆனால் அதனை அடைவதற்கு தேவையான செயல்களை நன்கு ஆராய்ந்து இருக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய இடத்தினை, நேரத்தினை ஆராய்ந்து இருக்க வேண்டும். அப்படி தக்க நேரத்தில் தக்க செயலை தக்க இடத்தில் செய்தால் ஒருவன் முயன்ற  இலக்கை அடையலாம். அது இவ்வுலகே ஆனாலும் அடையலாம்.

Similar questions