India Languages, asked by abjeyaseelan8940, 1 year ago

எனது தாய்நாட்டிற்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் கட்டுரை வரைக in 1000 words please answer me fast please I need urs help.... Please help me.... In tamil....

Answers

Answered by kaniya385
1
எனது இந்தியா” என்கிற தலைப்பில் துவங்கி, “வெல்க பாரதம்” என்று முடித்து தன்னுடைய தேசப் பற்றை வெளிப்படுத்தி இருந்தார் நமது அன்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். இந்தியா தேசியத்தின் மீதான ஆழ்ந்த அவரது ஈடுபாட்டை அவரது வலைப்பூவில் எழுதுவது பற்றியோ, இந்தியா என்கிற கூட்டு இன தேசியம் சமூக, பொருளாதார முன்நகர்வுகளில் செல்வது பற்றியோ நமக்கு அவருடன் மாற்றுக் கருத்து இல்லை.

கல்வி என்ற பெயரில் சில பல கணினிக் குறியீடுகளை கற்றுக் கொண்டதன் மூலமும், மிகப் பெரும் முதலீடு செய்து, ஏறத்தாழ விலை கொடுத்து வாங்கப்பட்ட கல்விப் பட்டங்களின் மூலமும் மட்டுமே நீங்கள் வளர்க்கும் இந்திய தேசியம் உள்ளடக்கிய விவசாயம் என்கிற இழிதொழில் செய்கிற, கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்ட உழைக்கும் மக்களாகிய, இரண்டு வேலை உணவுக்கும் வழியற்ற எம் அதே இந்திய மக்களின் வளர்ச்சியில் இரட்டை வேடம் புனைவதில் தான் நாம் முரண்படுகிறோம். உலகில் இதுபோன்ற பொருளாதார, சமூக ஏற்றதாழ்வுகளால் அல்லாடும் மக்களின் வளர்ச்சி பற்றியும் நமக்கு மட்டுமல்ல, நேர்மையான எழுத்துக்களை, நடுவுநிலையோடு பதிவு செய்யும் யாருக்கும் இருக்கும், இருக்க வேண்டும்.

இருப்பினும் அவருடைய வாதங்களில் சில நமது கேள்விகளுக்கு உட்படுகின்றன….

தமிழ் இலக்கியச் சிற்றிதழ்கள் இந்திய இறையாண்மையை எதிர்க்கின்றனவா?

ஆம், மிகப் பெரும்பாலான சிற்றிதழ்கள் இந்திய இறையாண்மையை எதிர்க்கின்றன, நாமும் ஒப்புக் கொள்வோம், ஆனால், அதற்கான காரணிகளை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும், நண்பர் ஜெயமோகன் அவர்களே, கிடைத்த நீதியை உரக்கச் சொல்லும், வெகு மக்கள் ஊடகங்களின் பக்கங்களில் கிடைக்காத நீதியை, முரசு கொட்டும் சமூக எதிர்வினைகள் தான் சிற்றிதழ் கட்டுரைகளும், நீங்கள் சொல்லும் இந்திய இறையாண்மை எதிர்ப்பும்.

தலித்தியக் குரல்களும், அவர்களுக்கான மறுக்கப்பட்ட நீதியையும் உங்களுக்குப் பட்டியல் போட்டுத் தர வேண்டுமென்றால், தொடர்ந்து இதுபோன்ற பல கட்டுரைகளை நான் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும், இருப்பினும், திண்ணியத்தில், மலம் தின்ன வைக்கப்பட்ட ஆதிக்க சாதி வெறியையும், இந்து (இந்திய) தேச நீதி அரசர்களால் பணத் தகராறாக புரிந்து கொள்ளப்படுகிற  மன விகாரங்களில் இன்னுமும் வாழும் சாதீய வெறியை, வழங்கப்பட்ட நீதியின் தீராத வேதனைகளையும் தான் சிற்றிதழ்கள் உரக்கக் கூவுகின்றன.கயர்லாஞ்சிகளின் கொடுமைகளை, உத்தபுரங்களின் ஈனச் சுவர்களை, ஒரிஸ்ஸாவின் மரண ஓலங்களை, குஜராத்தின் இந்துத்துவா முகங்களின் கொடூரங்களை எழுத வக்கற்று, நீர்த்துப் போன வெகுமக்கள் ஊடக எழுத்தாளர்களை அவர்களின் கையாலாகாத் தனங்களைத் தான் நீங்கள் சுட்டிக் காட்டும் சிற்றிதழ்கள் செவ்வனே நிரப்புகின்றன. அவற்றை நீங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாக நீங்கள் நினைத்தால் அல்லது புரிந்து கொண்டால், உங்கள் புரிதலின் ஆழம் குறித்து நான் கவலை கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அருந்ததிராய் ஒரு குருவி மண்டைக்காரரா?

ஒரு எழுத்தாளர் என்று ஒப்புக் கொள்ளப்பட்ட உங்கள் சக துறை சார்ந்தவரின், கருத்துரைகளுக்கான உங்கள் தெளிவான விளக்கங்களைக் கொடுப்பதை விடுத்து அவரது மண்டை குருவியைப் போன்றதா அல்லது கண் மீனைப் போன்றதா என்கிற ஆய்வுகள் ஒரு முதிர்வு பெற்ற எழுத்தாளருக்கான அடையாளங்கள் என்று பொருள் கொள்வது மிகக் கடினம். எனவே அருந்ததி ராய் மீதான உங்கள் குற்றச் சாட்டுகள் அனைத்தும் அவரைப் போல நம்மால் புகழடைய முடியவில்லையே என்கிற உங்கள் இயலாமையாகக் கொள்ளலாம். உங்களால் இயலும் என்று நம்புங்கள், அதற்கான நகர்வுகளை நோக்கி உங்கள் எழுத்தை எடுத்துச் செல்லுங்கள், உங்களைத் தவிர்க்க இயலாது என்கிற நிலையை உங்கள் ஆனித் தரமான எழுத்துக்களால் உறுதி செய்து இந்தியாவின் மிகப் பெரும் அச்சு ஊடகங்கள் என்று நீங்கள் கருதுகின்ற

“இந்தியா டுடே” இல் உங்கள் எதிர் வினையை பதியுங்கள். வாழ்த்துக்கள்.

இஸ்லாம் ஒரு தேசியக் கற்ப்பிதமா?

இந்துமதம் என்பது எப்படி ஒரு தேசியக் கற்ப்பிதமோ அதைப் போலவே இஸ்லாமிய வழியும் ஒரு தேசியக் கற்ப்பிதம், இன்று இந்துத்துவா வெறியர்களின்  முகங்களான ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்க்தல், பாரதீய ஜனதா போன்றவை என்ன வழியை இந்துமதக் கூட்டத்திற்குக் கற்றுக் கொடுக்கிறதோ அதையே தான் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் எதிர்வினை செய்கின்றன. உலகெங்கும் நடக்கும் தீவிரவாதங்கள் வெவ்வேறு அடக்குமுறைகளின் வடிவங்களாகவே இருக்கிறது அல்லது கருத்தியல் சார்ந்த நெருக்கடிக்கு ஆளான மக்கள் குழுவின் ஒரு குறிப்பிட்ட செயலுக்கான எதிர் வினையாகவே இருக்க முடியும்.

ஆதலால், இந்தியாவில் நடக்கும் தீவிரவாதங்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் தீவிரவாத நிகழ்வுகளுக்கும் நீங்கள் முடிச்சுப் போட நினைப்பது எவ்வளவு சரி என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை, அல்லது அதற்கான முழுமையான ஆய்வறிக்கைகளை நான் படிக்க வேண்டும், நீங்கள் அவ்வாறு படித்து, உலகெங்கும் நடக்கும் பல்வேறு நாடுகளின் தீவிரவாதமும், இந்தியாவில் நடக்கும் தீவிரவாதமும் ஒரே காரணத்துக்காக நடக்கிறது என்கிற முடிவுக்கு வந்திருந்தால் ஒரு வேலை உங்கள் கருத்து சரியானதாக இருப்பதற்கு, இருப்பதாக நம்புவதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. வெகு மக்களை நம்ப வைப்பதில் இந்திய பார்ப்பனீய ஊடகங்கள் கண்ட வெற்றியை ஒரு தமிழ் எழுத்தாளரையும் நம்ப வைத்து இப்போது அவரது சுய சிந்தனையை மழுங்கடித்து இருக்கின்றன என்கிற ஒரு செய்தி கொஞ்சம் கவலைக்குரியது.

நானும் உங்களைப் போல இந்த தேசத்தை நேசிக்கும் காலம் வர வேண்டும் என்கிற ஆசைகளுடனும், கனவுகளுடனும்….

kaniya385: whether for competition
kaniya385: you can refer some book know
Answered by kanya123
2
நீங்கள் குறிப்பிடும் ஒடுக்குமுறைகள், சமூக அநீதிகள் உங்கள் அளவுக்கே எனக்கும் மனக்கொந்தளிப்பை உருவாக்குகின்றன என்பதை மட்டுமே என்னால் ஆத்மார்த்தமாகச் சொல்ல முடியும். அத்தகைய அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கவும் போராடவும் கூடியவனாகவே இருக்கிறேன். ஒரு போதும் தனிவாழ்வில் சாதி மத அடிப்படைகளுக்குள் நான் சிக்கியதில்லை.
நண்பரே,  ஒடுக்கப்பட்டோர் ஒருங்குதிரண்டு அரசியல் சக்தியாக மாறி அதிகாரத்தை அடைவதற்கான வாய்ப்புகளை திறந்து விட்டிருக்கும் ஒன்றாகவே இந்த ஜனநாயகம் இன்றும் உள்ளது என்பதை மாயாவதியை மட்டும் வைத்தாவது நீங்கள் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். நம்மைச்சுற்றியிருக்கும் எந்த தேசத்திலும் இன்று இத்தகைய எளிய வாய்ப்புகூட இல்லை என்பதை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.
இந்நிலையில் பிரச்சினைகளின் உண்மைநிலையை ஆராயவும் அதன் தீர்வுகளை நோக்கிச் செல்லவும் தேவையான சமநிலை கொண்ட ஆய்வு நோக்குக்குப் பதிலாக மக்களிடையே அவநம்பிக்கைகளை தூண்டிவிடவும் வன்முறைகளுக்கு தூபம் போடவும் கூடிய விதத்திலேயே நம் அறிவுஜீவிகள் எழுதுகிறார்கள். வரலாற்று நோக்கு கொண்ட எவருமே ஒரு மக்கள் திரளின் துயரங்களுக்குக் காரணம் இன்னொரு மக்கள் திரளே என்ற எண்ணத்தை விதைக்க மாட்டார்கள். அத்தகைய எண்ணங்கள் பேருருவம் கொண்டு இன்று ஆப்ரிக்கா போன்ற மூன்றாமுலக நாடுகளை உதிரத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த தேசம் ஒரு புனித கற்பனை என்று நான் எண்ணவில்லை. இந்த தேசத்தை இந்து தேசிய கற்பிதமாகவும் நான் எண்ணவில்லை. இந்த தேசியத்துக்கான மூலங்களை தொன்மையான பெருமிதங்களில் தேடவும் இல்லை. மாறாக சென்ற  பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கே மக்கள்  ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ்ந்ததன் மூலம் இயல்பாக இங்கே ஒரு தேச அமைப்பு உருவாகியிருக்கிறது. தமிழர் பெருங்கூட்டம் இல்லாத இந்தியப்பகுதி இல்லை. எந்த இந்திய நிலத்திலும் பலமொழி பல இன பல மத மக்கள் கலந்துதான் வாழ்கிறார்கள். இந்தப்பரவல் காரணமாக இயல்பாக உருவான ஒரு தேசியம் இது. பேதங்களை பெருக்கி இந்த தேசத்தை உடைத்தால் ஆப்ரிக்கா இன்று காணும் குருதிக்களத்தை நாளை நம் நாடும் காணும். அதற்காகவே காத்திருக்கின்றன ஆயுதம் விற்கும் நாடுகள்.
இந்திய தேசியம் இன்று ஒரு நவீன நிலம் சார் தேசியமாகவே முன்வைக்கபப்டுகிறது. காந்தியும் நேருவும் அம்பேத்கரும் உருவாக்கியளித்த இந்த நவீன தேசிய உருவகமே நமது பெரும் வலிமை. இதை இழந்தால் நாம் அழிவோம். இதை இந்து தேசியம் என்று முத்திரைகுத்தி இந்த தேசியத்துக்கு மாற்றாக முன்வைக்கப்படும் மொழிவழி , மதவழி தேசியங்கள்தான் முழுக்கமுழுக்க ·பாசிஸத்தில் வேரூன்றியவை. தொல்பழங்காலப் பெருமையில் ஊறியவை. சமீபத்தில் அருந்ததியர் பற்றிய ஒரு வினாவுக்கு தமிழ்த் தேசியவாதி ஒருவர் திட்டவட்டமாக பதில் சொன்னார், அவர்களுக்கு தமிழ் தேசியத்தில் இடமில்லை, அவர்கள் தமிழ்தேசியத்தின் அகதிகள்தான் என. இங்குள்ள 40 சதவீத தெலுங்கு மக்கள் துரத்தப்படவேண்டும் என. இந்த ·பாசிசத்த்தானே இந்திய தேசியம் என்ற நவீன உருவகத்துக்கு மாற்றாக நம் அறிவுஜீவிகளும் சிற்றிதழ்களும் முன்வைத்து வருகின்றன.
இந்த மண்ணில் சமூக மாற்றம் நிகழவேண்டுமானால், இந்த மண்ணில் பொருளியல் வளார்ச்சி சற்றேனும் நிகழ்ந்து இங்குள்ள கோடானுகோடி மக்கள் பட்டினியை உதற வேண்டுமானால் இது தன் முரண்பாடுகளை களைந்து கொண்டே ஆக வேண்டும். ஒரு சமூகமாக ஒருங்கிணைந்து முயன்றாக வேண்டும். அதற்கான வாய்ப்புகள் தேடி வரும் வேளை இது. அந்த வளர்ச்சி நிகழ்ந்துகொண்டும் இருக்கிறதென இந்நாடெங்கும் பயணம் செய்யும் என்னால் சொல்ல முடியும். இந்நிலையில் முரண்பாடுகளை பெருக்கவும் மோதல்களை வளர்க்கவும் செய்யப்படும் பொறுப்பில்லாத முயற்சிகள் என்னை கொதிக்கச் செய்கின்றன.
காஷ்மீர் மக்கள் அவர்களே தெளிவாக மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள், அவர்கள் தேடுவது ஒரு இஸ்லாமிய அரசை, ஒரு தாலிபானிய அரசை என்று. தமிழ்க இஸ்லாமிய இதழ்கள் ஒவ்வொன்றும் அதை மீண்டும் மீண்டும் வழிமொழிகின்றன. நம் சிற்றிதழ்கள் மட்டும் ஏன் அதை ஒரு ஜனநாயக விடுதலைபோராட்டம் என்று பிடிவாதமாக விளக்க முனைகிறார்கள்?அதை மட்டுமே எளிய இந்தியக் குடிமகனாக நான் கேட்கிறேன்.
தலித்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று சொல்லி இங்குள்ள எளிய இஸ்லாமிய இளைஞனின் நெஞ்சில் இந்த நாடு மீதும் இங்குள்ள பெரும்பான்மை மக்கள் மீதும் கடும் வெறுப்பை உருவாக்குவதா சிற்றிதழ் அறம்? அதன்மூலம் இங்கே சமூக வன்முறையை உருவாக்கி இங்குள்ள குறைந்த அளவு தொழில் வளர்ச்சியைக்கூட காவு கொடுப்பதா சிற்றிதழ்ச் சிந்தனை? பிகாரில் கயர்லாஞ்சியில் பசுவை உரித்த தலித்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று சொல்லி தமிழ்தேசியம் பேசி இங்கே பசுவைத்தின்னும் அருந்ததியரை அகதிகளாக துரத்த வேண்டும் என்று வாதிடுவதா சிற்றிதழ் அறம்? புரியவேயில்லை நண்பரே.
நான் காஷ்மீர் மக்களுக்காகவும் ஆழமாக வருந்துகிறேன். மதவெறி ஏற்றப்பட்ட எளிய மக்கள் அவர்கள் எந்த திசை நோக்கிச் செலுத்தபப்டுகிறார்கள் என்றே அறிவதில்லை. உதிரத்தில் மிதித்து நடந்து அறிவு ஜீவிகள் மறுபக்கம் சென்று விடுவார்கள். கீழே உள்ள மக்கள்தான் காலந்தோறும் அழிவார்கள். கா·பிரின் கீழ் வாழமுடியாது, இந்து தேசம் தங்களை அழிக்கும் என்று சொல்லபப்ட்டதை நம்பி இஸ்லாமிய தேசிய வெறியுடன் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த பிகாரி முஸ்லீம்கள் இன்றும் அங்கே ரத்தம் சிந்துகிறார்கள். ஏதாவது பாகிஸ்தானி நாளிதழை எடுத்து புரட்டிப்பாருங்கள்.
நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்நாட்டின் மீது அன்புசெலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  சமத்துவத்துக்காக, தன்மானத்துக்காக, விடுதலைக்காக அந்த அன்பின் அடிப்படையில் ஒன்று திரண்டு முயல்வோம். அது எளிதாக, உடனடியாக இருக்காதென்றாலும் நம் குறிக்கோள் அதுவாக இருக்கட்டும். நம்மை எவரும் பிரிக்காமல் இருக்கட்டும். நூறாண்டுகால போராட்டத்தால் நாம் அடைந்தவற்றை சண்டையிட்டு இழக்காமல் இருப்போம்.


raqib97: wow nice, but can't able to understand
raqib97: r u a boy or girl?
raqib97: boy
Similar questions