India Languages, asked by Aayesha5123, 8 months ago

கதை மாந்தர்கள் - குறிப்பு வரைக.

Answers

Answered by steffiaspinno
2

கதைமாந்தர்கள்:      

  • ஒரு நூல் எழுதுவதற்கு கற்பனையாக உருவாக்கப்படும் மனிதர்களை கதைமாந்தர்கள் என்பர்.        
  • வாசகமனத்தின் விருப்பமானது கதைமாந்தர்களுடன் பயணிப்பதே ஆகும்.          
  • ஆதலால், புதினத்தின் முதன்மையாக கதைமாந்தர்களை உயிர்ப்புடன் படைத்துச் செல்வதே ஆகும்.        
  • கதையில் முதன்மையாகக் காட்டப்படும் மாந்தர்களை முதன்மை மாந்தர்கள் எனவும்,
  • முதன்மை மாந்தர்களோடு இணைந்து சில நிகழ்வுகளில் காட்டப்படும் மாந்தர்களை துணைமாந்தர்கள் எனவும் கூறுவர்.    
  • ஒரு கதைமாந்தர் அறிமுகமாகும் இடத்திலேயே அவரைப் பற்றிய தன்மையை வாசகர்களுக்கு தெளிவாக புரியும் வகையில் எடுத்துக்காட்ட வேண்டும்.  
  • பொதுவாக கதைமாந்தரின் தோற்றம் அவரை அறிமுகமாக்கும் இடத்திலேயே முதுவதுமாகச் சொல்லிக் கொண்டு இருக்க தேவையில்லை.
  • அது கதை தொடர்ந்து கொண்டிருக்கும் போதே முழுமையாக வெளிப்படும்.  
Similar questions