கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்து விடுவதால் பெய்வது ?
Answers
Answered by
0
Answer:
) அல்லது காடிநீர் மழை அல்லது வேறு வடிவில் காடி நீர் வீழ்தல் என்பது, வழமைக்கு மாறான அமிலத் தன்மை கொண்ட மழை அல்லது வேறுவிதமான வீழ்படிதல் ஆகும். இது, தாவரங்கள், நீர்வாழ் விலங்கினங்கள், உள்கட்டுமானம் என்பவற்றின் மீது தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கத்தை உண்டாக்குகிறது. இது பெரும்பாலும் மனித நடவடிக்கைகளால் வெளிப்படும் கந்தகம், நைதரசன் ஆகியவற்றைக் கொண்ட சேர்வைகள் வளிமண்டலத்துடன் தாக்கமுற்று அமிலங்களை உருவாக்குகின்றன. அண்மைக் காலங்களில் பல நாடுகள் இவ்வாறான சேர்வைகள் வெளிவிடுவதைத் தடுப்பதற்கான பல சட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
Answered by
0
அமில மழை:
- கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகிய இந்த இரண்டும் நீரில் கலந்துவிடுவதால் அமில மழை பொழிகின்றன.
- இந்த அமில மழையை முற்றிலும் மாசடைந்த ஒரு மழைப்பொழிவாகவே கருதப்படுகின்றன.
- பொதுவாக இது எரிமலை வெடிக்கும் பொழுது இம்மலை இயற்கையாகவே ஏற்படுவதுண்டு.
- அதேபோன்று தொழிற்சாலைகளின் புகை வாகனங்களின் புகைமற்றும்காற்றை மாசு படுத்தக்கூடிய இவைகளாலும் அமில மழை பெய்யும்.
- காற்று எந்த அளவிற்கு மாசடைகின்றது அந்த அளவிற்கு தகுந்தவாறு அமில மழையின் தாக்கமும் அதிகரிக்கும்.
- இது மிகவும் ஆபத்தான ஒரு மழை பொழிவும் கூட.
- எந்த அளவிற்கு என்று சொன்னால் இந்த அமில மழை என்பது பாறையை கூட அழித்து விடும் என்கின்ற அளவிற்கு சொல்லப்படுகின்றது.
Similar questions