India Languages, asked by saratchandrakum6582, 1 year ago

மாளாத காதல் நோயாளன் போல்"" என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக

Answers

Answered by anjalin
86

மாளாத காதல் நோயாளன் போல் எனும் இத்தொடரில் உள்ள உவமையை இங்கு பார்க்கலாம்.

  • இங்கு உவமையாக நோயாளியை போல் என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது மருத்துவர் நோயாளிக்கு உடலில் ஏதாவது புண் ஏற்பட்டிருந்தால் அதை கத்தியால் அறுத்து சுட்டாலும் அதை நோயாளி தமக்கு நன்மை என்றே உணர்ந்து மருத்துவரை நேசிப்பார்.
  • அதேபோன்று இதை உவமையாக காட்டி பாடலாசிரியர் வித்துவக்கோட்டு எழுந்தருளியிருக்கும் அன்னையே மருத்துவரை போன்று நீ எனக்கு பல துன்பங்களை தந்தாலும் உனது அடியவனாகிய நான் நோயாளியைப் போலவே உன் அருளையே எப்பொழுதும் நான் எதிர்பார்த்து நிற்கின்றேன் என்பதாக தன்னுடைய பணிவை அழகிய ஊமையின் மூலம் சுட்டிக்காட்டுகின்றார்.
  • இதுவே இவ்வரிகளின் மூலம் உண்மையாக சொல்ல வருகின்ற செய்தியாகும்.
Answered by NoorulMubeena
8

Answer:

"மாளாத காதல் நோயாளன் போல்" என்று கூறும்போது ஆழ்வார் தன்னை நோயாளியாகவும் பெருமாளை மருத்துவராகவும் உவமைப்படுத்துகிறார்.

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி மருத்துவரை நேசிப்பார். வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீங்காத துன்பத்தைத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன் என்று குலசேகராழ்வார் வேண்டுகிறார்.

Explanation:

i hope you this may help you

please mark my answer as brainlist

Similar questions