திருநாவுக்கரசர் அப்பூதியடிகளிடம் வினவியதென?
குறுவினாக்கள்
பெரியபுராணம்
Answers
Answered by
0
விடை:
திருநாவுக்கரசர், “ஊர் எல்லையில் சிவனடியார்களுக்காக நீர்வைத்துள்ள தண்ணீர் பந்தலுக்கு உம் பெயர் எழுதாது வேறொருவர் பெயர் வைத்துள்ளமைக்கு காரணம் என்ன?” என்று அப்பூதியடிகளிடம் கேட்டார்.
விளக்கம்:
நாவுக்கரசர், அப்பூதி அடிகளார் அமைத்த தண்ணீர்ப்பந்தலைக் கண்டார். தென்றல் தவழும் குளிர்ச்சியான அதன் சூழலையும், அங்கு வழங்கப்படும் அமுதம் போன்ற தண்ணீரையும் கண்டு வியந்தார். அவ்வியப்புடன் அதைச் சுற்றிப் பார்த்தார்; அதன் எல்லாப் பக்கங்களிலும் 'திருநாவுக்கரசு தண்ணீர்ப்பந்தல்’ என்று தம் பெயர் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு பெருவியப்படைந்தார்.
அவர் அப்பூதியடிகளிடம், "சிவபெருமான் அடியார்களுக்காகத் தாங்கள் அமைத்த தண்ணீர்ப்பந்தலில் தங்கள் பெயரை எழுதாமல் வேறொருவர் பெயரை எழுதக் காரணம் என்ன?” என்று கேட்டார்.
Similar questions
Political Science,
9 months ago
Social Sciences,
9 months ago
Math,
9 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago