புலியின் கொடுஞ்செயல்கள்பற்றி உமறுப்புலவர் கூறுவன யாவை?
சிறுவினாக்கள்
சீறாப்புராணம்
Answers
Answered by
0
விடை:
புலியின் கொடுஞ்செயல்கள் பற்றி உமறுப்புலவர் கூறுவன :
அடர்ந்த காட்டினில் வாழும் புலி, மிகவும் கூர்மை வாய்ந்த நகங்களைக் கொண்ட அந்த கொடிய மிருகம், சிங்கக் கூட்டங்களைத் தவிர்த்துப் பிற மிருகங்களைக் கொன்று, அவற்றின் தசைப் பகுதிகளைத் தின்னும். பனை போன்ற பெரிய தும்பிக்கையினையும் மும்மதங்களையும் கொண்ட யானைகளின் தந்தங்களைப் பிடித்திழுத்து, அவற்றின் மார்பினைக் கீறி இரத்தத்தைக் குடிக்கும்; பிறகு, உறங்காது நின்று, அரிய பெரிய மலைகளும் அதிரும்படி இடியைக் காட்டிலும் மிகுதியாய் உறுமும்.
விளக்கம்:
புலியின் வெறிச்செயல் குறித்து, விலாதத்துக் காண்டம் – புலி வசனித்த படலத்தில் வரும் " நிரம்பும் வள்ளுகிர் மடங்கலின் " என்று தொடங்கும் பாடலில் மேற்கூறியவாறு வருகிறது.
Similar questions
Math,
6 months ago
Math,
6 months ago
Social Sciences,
6 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Biology,
1 year ago
Biology,
1 year ago