India Languages, asked by StarTbia, 1 year ago

அணுபற்றிய கம்பரின் கருத்து யாது?
சிறுவினாக்கள்
தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

Answers

Answered by gayathrikrish80
2

விடை:



கம்பர், ‘ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்' என்று கூறினார். இதன் மூலம் இன்று அறிவியல் துறை நிறுவியுள்ள அணுப் பிளப்பும், அணுச் சேர்ப்பும் என்பதனை கம்பரும் கருத்தாகக் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது.



விளக்கம்:



இறைவன் எங்கும் உளன் என்ற உயர்ந்த செய்தியை விளக்கக் கம்பர் கைக்கொண்ட உதாரணங்களை ‘ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்' என்று தொடங்கும் பாடலில் பார்க்கலாம்.



முதலாவதாக, பெரிய பொருள்கள் தொடங்கி, நம் கண்களுக்குப் புலப்படாத மிகச்சிறியதாகிய அணுவிலும், அதனினும் சிறிய கோணிலும்கூட இறைவன் இருக்கிறான். உருவமுள்ள பொருள்களான இவை தவிர, உருவமேயில்லாத செல்லிலும்கூட அவன் உள்ளான் என்பதையும் சுட்டுகிறார்.



மேலும், சாணில் தொடங்கி அணுவினைச் சதகூறிட்ட கோணில் முடிக்கும்போதும், மாமேருக் குன்றில் தொடங்கி தூணில் முடிக்கும்போதும், அவர் ஒரு பெரிய பொருளிலிருந்து சிறிய பொருளுக்கு மெல்ல இறங்குவரிசையில் இறங்குவதைக் காண முடிகிறது. இதன் மூலம் இன்று அறிவியல் துறை நிறுவியுள்ள அணுப் பிளப்பும், அணுச் சேர்ப்பும் என்பதனை கம்பரும் கருத்தாகக் கொண்டிருந்தார் என அறிய முடிகிறது.


Similar questions