5. உப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்துஎழுது.
Answers
Answer:
என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமமும், விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருளுமாகும். சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும். இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது. இதன் வாய்பாடு "NaCl" என வேதியலில் குறிக்கப்படுகிறது. வேறு சில வேதியியல் பொருட்களும் உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சான்றாக சோடா உப்பு, பேதி உப்பு போன்றவைகளாகும். இயற்கையில் படிகக் கமிமமாகத் தோன்றும் இவ்வுப்பு பாறை உப்பு என்றும் ஆலைட்டு என்றும் அறியப்படுகிறது. கடல் நீரில் உப்பு மிக அதிக அளவில் காணப்படுகிறது. திறந்தவெளி கடலில் உள்ள கடல் நீர் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பைக் கொண்டுள்ளது. இதன் உவர்ப்புத்தன்மை 3.5 சதவீதம் ஆகும். வேதியல் உப்புகள் சில பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால்,சமையல் உப்பு தாவரங்களுக்கு நஞ்சு சார்ந்தது ஆகும்.
மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும்.பொதுவாக உப்பு உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு கனிமம் ஆகும். உப்பு என்பது அடிப்படை மனித சுவைகளில் ஒன்றாகும். விலங்குகளின் திசுக்கள் தாவர திசுக்களை விட அதிகமான உப்பைக் கொண்டுள்ளன. உப்பு என்பது பழமையான மற்றும் எங்கும் நிறைந்த உணவுகள் ஒன்றாகும், மற்றும் உப்பேற்றம் என்பது உணவுப் பாதுகாப்பின் ஒரு முக்கிய வழிமுறையாகும்.
உப்புகளின் பயன்கள்:
- உப்புகள் என்பது வருவல்களில் சேர்க்கப்படும் வெண்மையான சேர்மம்.
- உப்புகள் கடல் நீரில் இருந்தே கிடைக்கப்படுகின்றது.
- இவற்றில் இருந்து சோடியம் குளோரைடு பிரிக்கப்படுகின்றது.
- உப்புகள் அனைத்தும் அயனிகளின் சேர்மம் ஆகும்.
- வினையின் மூலம் கிடைக்கும் விளை பொருள்களே உப்புக்கள் ஆகும்.
- உப்புகள் நீரில் கரைத்து நேர் மற்றும் எதிர் அயனிகளை உருவாக்குகின்றன.
- அமிலம் + காரம் -> உப்பு + நீர் + வெப்பம்.
- உப்புகள் பெரும்பாலும் திடப்பொருள்களாகும்,
- இவை அதிக வெப்பநிலையில் உருகவும்,கொதிக்கவும் செய்கின்றன.
- உப்புகள் நீரில் கரையும் ஆனால், சில்வர் குளோரைடு நீரில் கரையாது.
- உப்புகள் நிறமற்றது, வெண்மையானது, இது காண சதுர படிகம் அல்லது படிக்கத் தூளாக இருக்கும்.
- உப்புகள் நீரை உறியும் தன்மைக் கொண்டது.