India Languages, asked by StarTbia, 1 year ago

7. சந்திப்பிழை நீக்கி எழுதுக
அனைத்து துறைகளிலும் ஆண்களைபோலவே பெண்களுக்கும் அரசு பணி கொடுக்கவேண்டும்
சந்திப்பிழை நீக்கி எழுதுக / Correct the sentence
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசுப் பணி கொடுக்க வேண்டும்.


விளக்கம்:


சொல்லோடு  விகுதியும்  மற்றொரு  சொல்லும்  சேரும் போது ஏற்படும் மாற்றங்களைச் 'சந்தி' என்பர். வாக்கியத்தில் ஏற்படும் பொருட் குழப்பத்தை நீக்கித் தெளிவைக் காக்கச் சந்தி இலக்கணம் ஒரு இன்றியமையாத கருவி ஆகும்.


எடுத்துக்காட்டாக, 1. மாட்டுக்கன்று என்பதற்குப் பதிலாக மாடுகன்று என்று எழுதினால் பொருள் மாறுபடுகிறது. 2. பட்டு சேலை உடுத்தினாள் என்றால் பட்டு எனும் பெண் சேலை உடுத்தினாள் என்று பொருள் அதே சந்தி சேர்க்கும் போது பட்டுச்சேலை உடுத்தினாள் என்று கூறும் போது பொருள் மாறுபடுகிறது.


மேலும், மொழியில் வழிவழியாகக் காக்கப்பட்ட மரபு காக்கப்படுவதற்குச் "சந்தி" உதவி புரிகிறது. 





Similar questions