India Languages, asked by chicagosingless4564, 1 year ago

(i) மகத அரசர்களின் கீழ் இருந்த
மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச்
செயலாளர்களாகச் செயல்பட்டார்கள்.
(ii) மெகஸ்தனிஸ் எழுதிய ‘இண்டிகா’
என்னும் வரலாற்றுக் குறிப்பு மௌரிய
ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த
ஆவணமாக விளங்குகிறது.
(iii) ஒரு பேரரசைக் கட்டமைக்க நந்தர் செய்த
முயற்சியை, மௌரிய அரசை உருவாக்கிய
அசோகர் தடுத்து நிறுத்தினார்.
(iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது
வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின்
தீவிரமான ஆதரவாளராக இருந்தார்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (iii) மற்றும் (iv) சரி

Answers

Answered by anjalin
1

(ii) சரி  

  • மெகஸ்தனிஸ் எழுதிய ‘இண்டிகா’  என்னும் வரலாற்றுக் குறிப்பு மௌரிய  ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த  ஆவணமாக விளங்குகிறது.

இண்டிகா

  • செல்யூகஸின் தூதரான மெகஸ்தனிஸ் இந்தியாவிலேயே தங்கிவிட்டதாகச்  சொல்லப்படுகிறது.
  • அவரது இண்டிகா என்ற நூல் மௌரியர் காலத்து அரசியலையும் சமூகத்தையும் அறிந்துகொள்ள உதவுகிறது.
  • கங்கைச் சமவெளியில் தனது  ஆதிக்கத்தை நிலைநிறுத்திய பிறகு,  அலெக்ஸாண்டரின் மறைவால் ஏற்பட்ட  வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்  நோக்கத்தோடு சந்திரகுப்தர், தனது கவனத்தை வடமேற்குப் பக்கம் திருப்பினார்.
  • இன்றைய  ஆப்கனிஸ்தான், பலுசிஸ்தான், மாக்ரான் ஆகிய  பகுதிகளை உள்ளடக்கிய வடமேற்கு எந்த எதிர்ப்புமின்றிச் சரணடைந்தது.
  • அதன்பிறகு  சந்திரகுப்தர் மத்திய இந்தியாவிற்கு நகர்ந்தார் .
Similar questions