India Languages, asked by StarTbia, 1 year ago

11. கொக்கை உவமையாக காட்டி வள்ளுவர் விளக்கும் கருத்து யாது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


ஒரு செயலைச் செய்வதற்கு, இரையை எதிர்பார்த்திருக்கும் கொக்கினைப்போலக் காத்திருந்து, அது தக்க இரையினைக் கண்டவுடன் செயல்படுவது போல் விரைந்து செயல்பட்டுச் செயலை முடிக்க வேண்டும்.


விளக்கம்:


இந்த குறள் காலமறிதல் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 
குத்தொக்க சீர்த்த இடத்து.

(அதிகாரம்: காலமறிதல் குறள் எண் : 490) 


காலத்தை எதிர்பார்த்துக் காத்திருத்தலுக்கு இரையை எதிர்பார்த்துக் காத்திருத்தல் உவமையாகும். காலம் வாய்த்தபோது செயலாற்றி முடிப்பதற்கு, இரை கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தவுடன் விரைந்து செயல்படுதல் உவமையாகும்.


அதாவது ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இருத்தலும், செயற்படும் நேரம் வந்தபோது எவ்வாறு கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிகிறதோ அது போல காலம் வாய்க்கும் போது,  ஒரு செயலை பிழையின்றிச் செய்து முடிக்க வேண்டும்.

Similar questions