India Languages, asked by StarTbia, 1 year ago

13. திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
54

விடை:


நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் எனப் பல பெயர்களால் திருவள்ளுவர் வழங்கப் பெறுவார்.


விளக்கம்:


திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவர் கி.மு 31ல் பிறந்தவர் என அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் இவருடைய காலம் முதலிய விபரங்களும் சரிவரத் தெரியவில்லை. 


சில செவிவழிச் செய்திகளின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார். கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர்.

Answered by 8g35
7

Answer:

hope it helps....

Good Afternoon

Attachments:
Similar questions